Breaking News

தங்கை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் தங்கையின் கணவரை கொலை செய்த அண்ணன் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

தங்கை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் தங்கையின் கணவரை கொலை செய்த அண்ணன் நடந்தது என்ன முழு விவரம்

சிவகாசியில் 23 வயதான நந்தினி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த 26 வயதான கார்த்திக் பாண்டியை நந்தினியின் சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக் பாண்டி (26). இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்த சிவகாசி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி குமாரி (22) என்பவரைக் காதலித்துள்ளார்.இவர்களின் திருமணத்திற்க்கு இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி 8 மாதங்களுக்கு முன்னர் இவர்கள் திருமணம் செய்துக் கொண்டார். .திருமணத்துக்குப் பிறகு இருவரும் தனியாக வசித்து வந்தனர். மேலும் நந்தினி சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

 


இந்நிலையில் நேற்றிரவு பணியை முடித்த நந்தினியை அழைத்துச் செல்ல சூப்பர் மார்க்கெட்டிற்க்கு வந்த கார்த்திக் பாண்டியை சுற்றி வளைத்த 3பேர் கும்பல் சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கைப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலறிந்து வந்த போலீஸார் கார்த்திக் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலையாளியை தேடி வந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் நந்தினியின் சகோதரர் பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த படுகொலை செய்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து பாலமுருகன், தனபாலன் மற்றும் சிவா ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்டம், மாரனேரி காவல் நிலையம் சரகம், அய்யம்பட்டி கிராமம், மாரி முத்து என்பவரின் மகன் கார்த்திக் பாண்டியன் (27) என்பவரும் திருவில்லிபுத்தூர் உட்கோட்டம், மல்லி காவல் நிலையம், மகாத்மா காந்தி நகரில் வசித்து வரும் பொன்னையா என்பவரின் மகள் நந்தினி (22) என்பவரும் காதல் திருமணம் செய்து அய்யம்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். 

இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் கடந்த 24.07.2024ம் தேதி திருத்தங்கல் காவல் நிலையம் சரகம், லெட்சுமி நகர், கண்ணன் சூப்பர் மார்க்கெட் அருகில் நந்தினி வேலை பார்க்கும் கடை அருகில் வைத்து கார்த்திக் பாண்டியன் என்பவரை மேற்படி நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை ஆணவக்கொலை என்று தவறாக சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர். 

இது ஆணவக்கொலை அல்ல. இறந்தவரும் அவர் காதல் திருமணம் செய்த பெண்ணும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் சமீபத்தில் அவர்களது மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்து மேற்படி குற்றவாளிகள் இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. எனவே தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்ற விபரம் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் தெரியப்படுத்தப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback