Breaking News

குடிபோதையில் நாகபாம்பிடம் வம்பிழுத்த நபரை கடித்த பாம்பு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

anantapur Playing with a cobra under the influence of alcohol.. A cobra came into the premises of a degree college in Kadiri, where a youth who was under the influence of alcohol was playing with the snake and was bitten by the cobra.

 


ஆந்திராவில் உள்ள அனந்தப்பூரில் உள்ள கதிரி பட்டயக் கல்லூரி வளாகத்திற்குள் வந்த நாகப்பாம்பிடம்  குடிபோதையில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த வாலிபரை நாகப்பாம்பு கடித்துள்ளது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது

ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள கதிரியில் நாகராஜு என்ற வாலிபர் குடிபோதையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள டிகிரி காலேஜ் அருகே கதிரி-அனந்தப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​ஒரு நாக பாம்பை பார்த்துள்ளார். அவர் அந்த பாம்பிடம் ரகளையில் ஈடுபட்டார். கையால் அடித்தும், காலால் உதைத்தும் சித்ரவதை செய்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக பாம்பு கூட வெகுநேரம் அமைதியாக இருந்துள்ளது, 


அங்கிருந்தவர்கள் அவரிடம் வேண்டாம் என கூறியதை கேட்காமல் பாம்பிடம் விளையாடி கொண்டிருந்தார் .பாம்பு அவரிடம் இருந்து ஒருவழியாக தப்பித்து புதர்களுக்குள் செல்ல முற்பட்ட போது அவர் அந்த பாம்பை பிடித்து மீண்டும் சாலையில் வைத்து விளையாடினார். 

இப்படி சுமார் 40 நிமிடங்களாக பொறுமையுடன் இருந்த பாம்பு ஒரு கட்டத்தில் அவரை கடித்துவிட்டது உடனே அங்கிருந்தவர்கள் நாகராஜை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

நாகராஜு பாம்புடன் விளையாடுவதை உள்ளூர்வாசிகள் வீடியோ எடுத்தனர்.. தற்போது இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1816473252107374596

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback