Breaking News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது

அட்மின் மீடியா
0

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைதுநெல்லை, வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு  நடைபெற்று முடிந்தது. 

நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது தமிழக அரசு மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback