Breaking News

வெளிநாடு செல்லும் அனைவருக்கும் வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் இல்லை மத்திய அரசு விளக்கம் Tax clearance certificate

அட்மின் மீடியா
0

வெளிநாடு செல்லும் அனைவருக்கும் வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் இல்லை மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாகப்பட்டு உள்ளது.

இந்தியாவிலிருந்து நாட்டை விட்டு வெளியேறக்கூடிய நபருக்கு நிலுவை வரி இல்லை அல்லது நிலுவையில் உள்ள வரியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அந்த சான்றிதழ் உறுதிப்படுத்தும். இது தொடர்பான சட்ட திருத்தம் வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


அதாவது இந்தியாவை விட்டு வெளியேறுபவர்கள் டேக்ஸ் கிலியரன்ஸ் சர்டிபிகேட் Tax clearance certificate எனப்படும் வரி பாக்கி இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என கடந்த 23ஆம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இது கட்டாயம் என கூறியுள்ளார்

இந்நிலையில் மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

நிதி மசோதா 2024ல், கறுப்பு பணச்சட்டம் 2015ன் குறிப்புகள் சேர்க்கப்பட்டு, வெளிநாடு செல்லும் நபர்கள் வரி அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

இந்த திருத்தத்தின்படி, வெளிநாடு செல்லும் அனைத்து நபர்களும் வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இல்லை.

வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 230ன் படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் வரி நிலுவை வைத்திருப்பவர்கள் மற்றும் கடுமையான நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன்பாக வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். 

அவர்கள், வருமான வரித் தலைமை ஆணையரிடம் வரி பாக்கி மற்றும் புகார்களுக்கான காரணங்களை விளக்கி, ஒப்புதல் பெற்ற பின்னரே வரி அனுமதி சான்றிதழை பெற முடியும். இதில் எந்த வரி பாக்கியும் இல்லை என வருமான வரி அதிகாரிகளால் சான்றிதழ் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு நபர் ₹ 10 லட்சத்துக்கு மேல் நேரடி வரி பாக்கி வைத்திருந்தால், அது எந்த அதிகாரியாலும் நிறுத்தி வைக்கப்படாமல் இருந்தால், அவர் வரி அனுமதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback