பெட்டி கடையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி அருந்திய 6 வயது சிறுமி மரணம் நடந்தது என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
இவரது மனைவி ஜோதிலட்சுமி இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ரித்தீஷ் (வயது9) என்ற மகனும் காவியா ஸ்ரீ (வயது 6) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மகன் ரித்திஷ் நான்காம் வகுப்பும் மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
காவியா ஸ்ரீ நேற்று முன் தினம் வீட்டின் அருகேயுள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய்க்கு குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்துள்ளார். அதனை குடித்த சிறுது நேரத்திலேயே சிறுமி காவியாஸ்ரீக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியதோடு, மயங்கியும் விழுந்துள்ளார்.
உடனடியாக சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி காவியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை ராஜ்குமார் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில், தனது மகள் மரணத்திற்கு மலிவு விலை குளிர்பானமே காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து ராஜ்குமார் அளித்த தகவளின் பேரில் தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே குளிர்பானம் குடித்தால் உயிரிழந்ததா அல்லது வேறு காரணம் ஏதேனுமா என தெரியவரும். இதனிடையே செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.
உள்ளூர்
செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து
செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow
செய்யுங்கள்
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்