Breaking News

பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையில் மசோதா தாக்கல் – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையில் மசோதா தாக்கல் – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு.

மேற்கு வங்காளத்தில் உள்ள கல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டார்.

 


இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தனது அரசாங்கம் பொறுத்து கொள்ளாது எனவும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் வகையில் அடுத்த வாரம் கூடும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்

இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்தாலோ அல்லது ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்ப தாமதித்தாலோ ராஜ்பவனுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபடுவேன். 

மேலும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மாநிலத்தின் அடிமட்டத்தில் சனிக்கிழமை முதல் திரிணாமுல் காங்கிரஸ் இயக்கம் தொடங்கும்.

அதேபோல் போராட்டத்தை கைவிட்டு, மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.போராடிவரும் மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback