Breaking News

காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு செப்.3ல் தேர்தல் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

 காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு செப்.3ல் தேர்தல் அறிவிப்பு முழு விவரம்

 


தெலுங்கானா ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த கேசவ ராவ் மற்றும்

ஒடிசா ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த மம்தா மோகன்தா ஆகிய 2 பேரும் சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 

அசாமில் இருந்து கமக்யா பிரசாத், சர்பானந்தா சோனாவால், 

பீஹாரில் இருந்து மிஷா பார்தி, விவேக் தாக்கூர், 

ஹரியானாவில் இருந்து தீபேந்தர் சிங் ஹூடா, 

மத்திய பிரதேசத்தில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா, 

மஹாராஷ்டிராவில் இருந்து உடயன்ராஜ் போன்ஸ்லே, பியூஷ் கோயல், 

ராஜஸ்தானில் இருந்து கே.சி.வேணுகோபால், 

திரிபுராவில் இருந்து பிப்லாப் குமார் 

ஆகிய ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர்கள்,தற்போது லோக்சபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ளனர்.

இதனையடுத்து, இந்த 12 ராஜ்யசபா இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்புமனுத்தாக்கல், 14.08.2024

வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள்:- 21.08.2024

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்:-27.08.2024

ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் நாள்:- 03.09.2024

தேர்தல் முடிவுகள் 03.09.2024 அன்று மாலை 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

 


 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback