Breaking News

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 14 பேர் உயரிழப்பு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
நேபால்-காத்மண்டு: 40 இந்தியர்களுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் 14 பேர் உயரிழப்பு, 16 பேர் படுகாயம்



நேபாளத்தில் 40 இந்தியர்களுடன் சென்ற பேருந்து தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே அமைந்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இ

தில் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்

விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீட்புப் பணியை முடுக்கிவிட்டது. இதில் ஆற்றில் விழுந்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 14 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியர்களா என்பது உள்ளிட்ட முழு விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1826961586839543886

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback