Breaking News

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

2024 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் 

புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல் துறை அதிகாரிகள் 2024-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்:- 

 


சுதந்திர தின விழா : 15 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு 

1. திருமதி.கி.புனிதா, காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம். வேலூர் மாவட்டம் 

2. திரு. து. வினோத்குமார், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை. 

3. செல்வி.ச.சௌமியா, காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு. கடலூர் மாவட்டம். 

4. திருமதி.ஐ.சொர்ணவள்ளி, காவல்ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம். திருப்பூர் மாநகரம். 

5. திருமதி. நா. பார்வதி, காவல் ஆய்வாளர். குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை. நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம். 

6. திருமதி.பெ.ராதா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர். 

7. திரு.செ.புகழேந்தி கணேஷ், காவல் துணை கண்காணிப்பாளர், செங்கல்பட்டு உட்கோட்டம்.செங்கல்பட்டு மாவட்டம். 

8. திருமதி. இரா.தெய்வராணி, காவல் ஆய்வாளர். பெருந்துறை காவல் வட்டம். ஈரோடு மாவட்டம். 

9. திருமதி. ஆ. அன்பரசி, காவல் ஆய்வாளர், பொன்னை காவல் நிலையம். வேலுலூர் மாவட்டம். 

10. திரு. நா.சுரேஷ். துணை காவல் கண்காணிப்பாளர். ஊரக உட்கோட்டம். தூத்துக்குடி மாவட்டம்.


 

இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2024- ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:- 

1.திரு.தா.ச. அன்பு. இ.கா.ப., காவல் துறை தலைவர். குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, சென்னை. 

2.திரு.இ.கார்த்திக், இ.க.பா.. காவல் கண்காணிப்பாளர்-I. தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை. 

3.திரு.சி.ர.பூபதிராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்பபுலனாய்வுத் துறை. சேலம் சரகம். 

4.திரு.க.சீனிவாசன், காவல் ஆய்வாளர் (தொ.நு.), காவல் தொலைத்தொடர்பு பிரிவு, சென்னை. 

5.திரு.பு.வ. முபைதுல்லாஹ். காவல் உதவி ஆய்வாளர். உள்வட்ட பாதுகாப்பு பிரிவு, அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை. விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும். 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். 

மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback