மத்தியப் பிரதேசத்தில் 15 வயது சிறுவனையும் அவனது பாட்டியையும் கண்மூடித்தனமாக கட்டையால் தாக்கிய ரயில்வே போலீஸ் வைரலாகும் வீடியோ
மத்தியப் பிரதேசத்தில் 15 வயது சிறுவனையும் அவனது பாட்டியையும் கண்மூடித்தனமாக தாக்கிய ரயில்வே போலீஸ் வைரலாகும் வீடியோ
மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ரயில் நிலையத்தில் 15 வயது சிறுவன், அவரது பாட்டியை ரயில்வே போலீஸார் கட்டையால் அடித்து சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
ரெயில்வே காவல்துறையைச் (GRP) சேர்ந்தவர்கள் பாட்டி மற்றும் அவரது பேரன் (15 வயது) ஆகியோரை திருட்டு வழக்கு குறித்து விசாரிக்கும் போது இப்படி அடித்துள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த வீடியோ குறித்து ஏஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று கட்னி எஸ்பி அபிஜீத் குமார் ரஞ்சன் தெரிவித்துள்ளார்
மேலும், இது திருடப்பட்ட நகைகளை மீட்பது தொடர்பான விசாரனையில் இதுபோல் நடந்ததாகவும் இந்த வீடியோ சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது எனவும் வீடியோவில் காணப்படும் GRP ஆட்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1828835567716704277
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ