Breaking News

கேரள நிலச்சரிவு... வயநாட்டில் தொடரும் மீட்பு பணி பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்வு!

அட்மின் மீடியா
0

கேரள நிலச்சரிவு... வயநாட்டில் தொடரும் மீட்பு பணி பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அடுத்தடுத்து வயநாட்டில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த நாட்டையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் இந்த கேரள நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. 

மீட்பு பணிகளின் போது மண்ணைத் தோண்டும் இடங்களில் எல்லாம் சடலங்கள் இருப்பதை பார்க்கும் போது மனது உருக்குலைந்து போகின்றது இரவு பகலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback