Breaking News

முதலமைச்சரின் தனி செயலாளராக 3 பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
முதலமைச்சரின் தனி செயலாளராக 3 பேர் நியமனம் முழு விவரம்
 
 
 
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனி செயலாளர்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் 2 தனி செயலாளராக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா வருகிற அக்டோபர் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 
 
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், தமிழ முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனி செயலாளர்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் 2 தனி செயலாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

முதலமைச்சரின் முதல் தனி செயலாளராக P.உமாநாத் IAS, அவர்களும்
 
இரண்டாவது தனி செயலாளராக M.S.சண்முகம் IAS ,அவர்களும்
 
மூன்றாவது தனிச் செயலாளராக அணு ஜார்ஜ் IAS அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback