Breaking News

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை சிறப்பு பேருந்து அறிவிப்பு.!முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் 3 நாட்கள் தொடர் விடுமுறை சிறப்பு பேருந்து அறிவிப்பு.!முழு விவரம்


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 24 சனிக்கிழமை

ஆகஸ்டு 25 ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 26 திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி 

இதன் காரணமாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் சனி ஞாயிறு போன்று விடுமுறை தினங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

சுபமுகூர்த்தம் மற்றும் கிருஷ்ண ஜெயந்திதொடர் விடுமுறை, முகூர்த்தம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம் - 

ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழ.மை சுபமூகூர்த்தம், 24ஆம் தேதி சனிக்கிழமை, 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 26ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விடுமுறை தினங்களையொட்டி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கூடுதல் சிறப்ப பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துஅதன் படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக் கிழமை மற்றும் 24 ஆம் தேதி சனிக் கிழமை ஆகிய நாட்களில் 485 பேருந்துகளும், 

தொடர்ந்து 25ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டி

லிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதி அன்று 70 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து வெள்ள மற்றும் சனிக்கிழமைகளில் 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 
தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback