Breaking News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை அதிரடியாக கைது செய்த போலிசார்!

அட்மின் மீடியா
0

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 

 

சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருகிறார்.

இன்று மாலை ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டருகே இருந்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை திடீரென சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிச்சாய்த்து பின் அங்கிருந்து தப்பி சென்றது. 

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

இந்த வழக்கில் 24 பேர் ஏற்கனவே கைதான நிலையில் தற்போது  ராஜேஷ், கோபி, குமரன் என மேலும் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.! 

இவர்களிடையே நாட்டு வெடிகுண்டுகள் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை. இந்த வழக்கில், இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வு.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback