Breaking News

நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதி பயங்கர விபத்து 3 இளைஞர்கள் பலி.! வீடியோ பார்க்க

அட்மின் மீடியா
0

நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதி பயங்கர விபத்து 3 இளைஞர்கள் பலி.! வீடியோ பார்க்க

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கன்னம் மாவட்டம், சாத்துப்பள்ளி மண்டல், பி. கங்காராம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணம் செய்த இளைஞர்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியை சரியாக கவனிக்காமல்  அதிவேகமாக நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்புறம் பலமாக மோதியது.


இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெட்டி சுரேஷ் (வயது 22), முடின்னா வேணு (வயது 19), கரீமுல்லாஹ் (வயது 11) ஆகியோர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர்களில் சுரேஷ் மற்றும் வேணுவின் தலை லாரியின் பின்பக்கம் பலமாக மோதியதால், அவர்களின் தலை பிளந்து மூளை வெளியே சிதறி பரிதாபமாக துள்ளத்துடிக்க மரணம் ஏற்பட்டது. 

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1819572022693056591



Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback