Breaking News

திண்டிவனத்தில் ஓடை நீரில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு! முழு விவரம்

அட்மின் மீடியா
0

 திண்டிவனத்தில் ஓடை நீரில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு! முழு விவரம்

விழுப்புரம் மாவட்டம் கோனேரிகுப்பம் கிராமத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சஞ்சய் (10), சகோதரிகள் பிரியதர்ஷினி(10), சுபஸ்ரீ(8) ஆகியோர் ஓடையைக் கடந்து செல்ல முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் சஞ்சய் (10), மாரிமுத்து என்பவரின் இரண்டு மகள்கள் பிரியதர்ஷினி (10) சுப்புலட்சுமி (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி சென்று வீட்டிற்க்கு வரும் வழியில் நல்லாத்தூரிலிருந்து ஓங்கூர் செல்லும் ஓடையில் உள்ள நாவல் மரத்தில் நாவற்பழம் பரிக்க சென்றுள்ளனர்.

கனமழையால் ஓடையில் நீர் அதிக அளவில் செல்கிறது. நாவல் பழம் பறிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்தபோது ஒரு குழந்தையின் பள்ளி சீருடை மட்டும் நீரில் மேலே தெரிந்துள்ளது. இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அந்த நபர் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளும்போது மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 

நாவல் பழம் பறிக்க சென்று மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback