Breaking News

மஹாராஷ்டிராவில் நர்சரி பள்ளியில் 4 வயது இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது Badlapur Protest

அட்மின் மீடியா
0

மஹாராஷ்டிராவில் நர்சரி பள்ளியில் 4 வயது இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது Badlapur Protest

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள ஒரு ஆங்கில வழி நர்சரி பள்ளியில் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட துப்புரவுப் பணியாளர் இரண்டு நான்கு வயது நர்சரி மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது . 24 வயதான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்,

 

 

தங்கள் மகள் பள்ளிக்கு செல்ல பயப்படுவதை தொடந்ர்து விசாரித்தபோது சிறுமி தன்னையும், தனது தோழியையும் கழிப்பறைக்கு அழைத்துச் செல்லும் போது, ​​பள்ளி ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறியுளார் அதனை தொடர்ந்து இரு குடும்பத்தினரும் நான்கு வயதுக் குழந்தைகளை மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்

உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அதனை தொடர்ந்து போலீசார்  பள்ளிக்கூடம் சென்று விசாரிக்கையில் சில நாட்களாக சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என தெரிய வந்துள்ளது. அதனை தொடந்ர்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.அதனை தொடர்ந்து விசாரனையில் அப்பள்ளியில் பணி புரிந்த துப்புரவுப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 4 வயது சிறுமிகள் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பத்லாபூர் ரயில் நிலையத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர் அப்போராட்டத்தில்  வன்முறை வெடித்துள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1825849552123117933

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback