Breaking News

வெறிநாய் கடித்து 4 வயது சிறுவன் பலி - நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

வெறிநாய் கடித்து 4 வயது சிறுவன் பலி.! நடந்தது என்ன முழு விவரம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் இவருக்கு 4 வயதில் நிர்மல் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நிர்மல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வீட்டின் அருகே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

 

அப்போது, அதே தெருவில் ஓடி வந்த வெறி நாய் ஒன்று சிறுவனைத் தாக்கி கடித்துக் குதறியுள்ளது. சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் ஓடிச் சென்று நாயை விரட்டி சிறுவனை மீட்ட பெற்றோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்ததில் சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்து சிறுவன் நிர்மல் உயிரிழந்தான்.

இதையடுத்து நேற்று இரவு சிறுவனின் உடல் அமரர் ஊர்தியில் வைக்கப்பட்டு வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்க செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback