Breaking News

இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது!நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

தஞ்சாவூர் அருகே இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த இளம் பெண் வெளியூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கவிதாசன் என்ற இளைஞருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த பெண்ணை தனியாக சந்தித்து பேச ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துள்ளார்.

 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

அங்கு சென்ற இளம்பெண்ணை அப்போது, கவிதாசன் மற்றும் அவரது நண்பர்கள் பீர் பாட்டிலை உடைத்து மிரட்டியுள்ளனர். 4 பேரும் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கவிதாசன், திவாகர் 27, பிரவீன் 20, மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அப்பெண் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.வீட்டிலிருந்த பெண்ணை மிரட்டி கஞ்சா கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback