Breaking News

ஏரி நிலத்தை ஆக்கிரமித்து 4 ஏக்கரில் கட்டியிருந்த நடிகர் நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு வீடியோ

அட்மின் மீடியா
0

ஏரி நிலத்தை ஆக்கிரமித்து 4 ஏக்கரில் கட்டியிருந்த நடிகர் நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு

 

தெலுங்கானா மாநிலம் மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா அருகே ஏரி நிலத்தை ஆக்கிரமித்து பிரபல நடிகர் நாகார்ஜுனா பிரமாண்ட கட்டடம் கட்டி இருப்பது தெரிய வந்தது. 

இந்த அரங்கில் தான், 2015-ல் தற்போதைய தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதி திருமண வரவேற்பு விழா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிலையில் இந்த கட்டிடம் சுமார் 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது  தெரியவந்த நிலையில் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இன்று காலை இடித்து அகற்றியது. 

பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், அரங்கின் 35 சதவீத கட்டுமானங்களை இடித்து தள்ளினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து நாகர்ஜுனா தெரிவிக்கவிகையில்:-

சட்டவிரோதமாக எனது N CONVENTION அரங்கம் தரைமட்டமாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. 

நாங்கள் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலிலும் | ஈடுபடவில்லை. ஏரியின் இடம் சிறிதும் ஆக்கிரமிக்கப்படவில்லை. 

இது தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட சட்டவிரோத நோட்ஸ்க்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தற்போது தவறான தகவலை மையமாக வைத்து அரங்கம் தகர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நீதிமன்றம் எனக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே கட்டடத்தை இடித்திருப்பேன். தவறான நடவடிக்கைக்காக நிவாரணம் கோரப்படும் என கூறியுள்ளார்

 வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1827242541743583240

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback