Breaking News

மதரஸா விடுமுறை அளிப்பார்கள் என 5 வயது சிறுவனை அடித்துக் கொன்ற சக மாணவர்கள்.. 3 சிறுவர்கள் கைது..டெல்லியில் பரபரப்பு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0
மதரஸா விடுமுறை விடுவாங்க 5 வயது சிறுவனை அடித்துக் கொன்ற சக மாணவர்கள்.. 3 சிறுவர்கள் கைது..டெல்லியில் பரபரப்பு நடந்தது என்ன முழு விவரம்

டெல்லியில் உள்ள ஒரு மதரஸாவில் விடுமுறை அளிப்பார்கள் என்று ஆசைப்பட்டு 3 சிறுவர்கள் சேர்ந்து 5 வயது சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தயாள்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்.


டெல்லி, தயாள்பூரில் உள்ள பிஜ்புரி பகுதியில் செயல்பட்டு வரும் மதரஸா ஒன்றில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் படித்து வரும் நிலையில் 5 வயது சிறுவன் ஒருவன் கடந்த 5 மாதங்களாப் படித்து வந்துள்ளார். 

சிறுவனின் தாய் மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகின்றார் அவரது தந்தை உத்தரபிரதேசத்தில் வசிக்கிறார் மற்றும் ஒரு மாதத்திற்கு ஒருமுறை டெல்லிக்கு வருவார் என கூறப்படுகின்றது

இந்நிலையில், அந்த சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறுவனின் தாய்க்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மதரஸாவுக்குச் சென்ற சிறுவனின் தாய் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில், சிறுவனின் தாய்க்கு தனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது . அவர் அவரை பிரிஜ்புரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் இதைக் கேட்டு கதறித் துடித்த தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை மதரஸாவுக்கு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அங்கிருந்த உறவினர்கள் கலைந்து சென்றனர்.

உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுவனுக்கு பல்வேறு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  5 வயது சிறுவனின் வயிறு மற்றும் வலது நுரையீரலில் ரத்தக்கசிவு இருப்பதும், தாக்குதலில் அவரது கல்லீரல் வெடித்ததும் கண்டறியப்பட்டது

இதைத்தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மதரஸாவில் படிக்கும் 3 சிறுவர்களால் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, கொலை செய்த 3 சிறுவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அதில் ஒரு சிறுவன் அவன் அடிக்கடி கெட்ட வார்த்தை பேசியதால் அடித்ததாக கூறியுள்ளார் மற்றும் ஒரு சிறுவன் அவரது மரணம் மதரஸாவுக்கு விடுமுறை அளிக்கும் என நினைத்து, அவரை அடித்ததாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக இந்த கொலை சம்பவத்தை போலீசார் உறுதி செய்துள்ளனர். வேறு யாருக்காவது இந்த கொலையில் தொடர்புள்ளதாக என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 103 இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback