Breaking News

குற்றாலத்தில் குளித்து கொண்டிருந்த போது அதிர்ச்சி - கற்கள் விழுந்து 5 பேர் படுகாயம்!

அட்மின் மீடியா
0

குற்றாலத்தில் குளித்து கொண்டிருந்த போது அதிர்ச்சி..கற்கள் விழுந்து 5பேர் படுகாயம்!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அடிக்கடி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 


குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் அருவியில் நீராட ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்

இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கற்கள் விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலத்தின் முக்கிய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தீயணைப்புத்துறையினரும் காவல்துறையினரும் பாதுகாப்புகாக  வரவழைக்கப்பட்டுள்ளனர். 

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback