ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் நகைக்கடையை கொள்ளயடித்த 5 பேர் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
ராஜஸ்தானில் கடை உரிமையாளரை சுட்டு கொன்று நகைக்கடையை கொள்ளயடித்த 5 பேர் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் ,பிவாடியில் உள்ள கமலேஷ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து காரில் தப்பித்த 5 பேர் சிசிடிவி வீடியோ, போலிசார் தீவீர விசாரனை
ராஜஸ்தான் மாநிலம் பிவாடியின் சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கமலேஷ் ஜூவல்லர்ஸ் கடைக்கு காரில் வந்த 5 கொள்ளையர்கள் இரவு சுமார் 7.30 மணியளவில் நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் உள்நுழைந்து கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கடை ஊழியர்களை அடித்து மிரட்டி நகைக் கடையில் உள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கள் பைகளில் நகைகளை அவசரமாக நிரப்பி, காத்திருந்த காரில் தப்பினர், இவை அனைத்தும் வெறும் 10 நிமிடங்களில். நடந்து முடிந்துள்ளது மேலும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கடையின் உரிமையாளர் கமலேஷ் சோனி மரணமடைந்துள்ளார் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் பிவாடியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,
தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் ,மேலும் சுற்றுப்புறத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் கடையில் உள்ள பதிவுகளை சரிபார்த்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1827536412088135939
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ