Breaking News

சென்னையில் சாக்லெட் எடுக்க பிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!

அட்மின் மீடியா
0

சென்னையில் சாக்லெட் எடுக்க பிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!

சென்னை ஆவடியில் பிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி சிறுமி ரூபாவதி (5) உயிரிழந்த பரிதாபம்!

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, தின்பண்டம் எடுப்பதற்காக பிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் பாய்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்



திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் கௌதம் - பிரியா தம்பதியினர் இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 5 வயதான மூத்த மகள் ரூபாவதி அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்

நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த சிறுமி ரூபாவதி. குளிர்சாதன பெட்டியை திறந்து அதிலிருந்து சாக்லெட் எடுத்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள ஆவடி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குளிர்சாதனப் பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அறிந்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback