சிங்கப்பூர் நாட்டில் வேலை இழந்தவர்களுக்கு 6 மாதங்களுக்கு $6,000 வெள்ளி நிதியுதவி பிரதமர் அறிவிப்பு
சிங்கப்பூர் நாட்டில் வேலை இழந்தவர்களுக்கு 6 மாதங்களுக்கு $6,000 வெள்ளி நிதியுதவி
சர்வதேச அளவில் தொழில் மந்த நிலை காரணமாக சிங்கப்பூர் நாட்டில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்கில்ஸ்பியூச்சர் ஆதரவுத் திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டாலர் வரை (இந்திய மதிப்புப் படி, ரூ. 3 லட்சத்து 83 ஆயிரம்) நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆகஸ்ட் 18 அன்று நடந்த தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் வோங் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்
மேலும் இத்திட்டம் குறைந்த, நடுத்தர வருமான ஊழியர்கள் மீது கவனம் செலுத்தும். ஆட்குறைப்பு செய்யப்பட்டோர், தங்கள் நிறுவனம் செயல்பட முடியாததால் வேலையை இழந்தோர் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.வேலை தேடுவோருக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவுத் திட்டம் குறித்த விவரங்களை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெளியிடுவார் என்று பிரதமர் வோங் தெரிவித்துள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்