அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62ஆக உயர்த்தப்படுகின்றதா உண்மை என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62ஆக உயர்த்தப்படுகின்றதா உண்மை என்ன முழு விவரம்
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தற்போது 60ஆக உள்ள ஓய்வு வயதை 62ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை, அப்படி எந்த ஆலோசனையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஓய்வு வயது குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தியே எனவும், இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது
மேலும் இதுகுறித்து அரசு தெரிவித்துள்ளதாவது; “அரசு ஊழியர் ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது’ என்ற தகவல் பரப்பப்படுகிறது.
இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்