Breaking News

மீண்டும் அதிர்ச்சி சம்பவம் !! பீகாரில் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி நடந்தது என்ன முழு விபரம்

அட்மின் மீடியா
0
மீண்டும் மீண்டுமா !! பீகாரில் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி நடந்தது என்ன முழு விபரம்

பிகார் ஜெகனாபாத் மாவட்டத்தில் மக்தும்பூர் பாபா சித்நாத் கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பாபா சித்தநாத் கோவிலில் இன்று அதிகாலை பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்துள்ளது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 35க்கும் அதிகமானவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், மற்றும் தீயனைப்பு வீரர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்தி நிலைமையை கட்டுபாட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்

கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் உத்தர பிரதேசத்தின் ஹத்ராசில் சாமியார் நாராயணன் ஹரி நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback