Breaking News

சக மாணவனை அரிவாளால் வெட்டிய 9ம் வகுப்பு மாணவன்.. நெல்லையில் மத்திய அரசு பள்ளியில் பயங்கரம்

அட்மின் மீடியா
0

நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய 9ம் வகுப்பு மாணவர்

அரிவாளால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவருக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இடையே தண்ணீரை சிந்தியதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்துச் சென்று சக மாணவரை வெட்டிய 9ம் வகுப்பு மாணவர்

அரிவாளால் தாக்கி விட்டு அந்த மாணவர் தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது



நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை அரிவாளால் 9ம் வகுப்பு மாணவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிவாளால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவருக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இடையே தண்ணீரை சிந்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்துச் சென்று சக மாணவரை 9ம் வகுப்பு மாணவர் வெட்டியதாகவும், முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

சம்பவம் குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த மாணவனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது அரிவாளால் வெட்டிய மாணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தேடிய வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback