Breaking News

உபியில் 9 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லர் கைது ? கொலை செய்தது ஏன் வாக்குமூலம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

உபியில் ப் கொலை செய்த சீரியல் கில்லர் கைது முழு விவரம்

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த கொலைகளை செய்த சீரியல் கில்லரை கைது செய்யப்பட்டுள்ளார்



உத்தரப் பிரதேசத்தின் பரேலி பகுதியில், கடந்தாண்டு ஜூன் மாதத்தில், சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு, இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல், அப்பகுதியிலிருந்த கரும்புத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதத்திலேயே அடுத்தடுத்து 2 பெண்களும், ஜூலையில் ஒருவரும், ஆகஸ்ட்டில் ஒருவரும், அக்டோபரில் ஒருவரும், நவம்பரில் 2 பெண்களும் ஒரே மாதிரியான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு, கரும்புத் தோட்டத்தில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டன.

40 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட அந்த 9 பெண்களும் பெண்களும் அவர்கள் கட்டியிருந்த சேலையைக் கொண்டே கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொலைக்கு பின் அவர்கள் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாக கரும்புத் தோட்டங்களிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாகக் கடந்த ஜூலை மாதம் அனிதா என்ற பெண் ஒன்பதாவதாகக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆப்ரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 அடங்கிய 22 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக இயங்கி வந்த போலீசார் ஒருவழியாக குல்தீப் என்ற அந்த கொலையாளியைப் பிடித்துள்ளனர்.

நவாபன்ஞ் மாவட்டத்தில் உள்ள கங்காவர் என்ற பகுதியில் வைத்து குல்தீப் என்ற அந்த சீரியல் கொலையாளியை மடக்கிப் பிடித்துள்ளனர். குல்தீப்பிடம் முதற்கட்ட விசாரணையில் திருமணம் ஆன குறுகிய காலத்திலேயே குல்தீப்பின் மனைவி அவனை விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்களின்மீது குல்தீப்புக்கு வெறுப்பு உருவாகி அதுவே கொலை செய்யத் தூண்டியுள்ளது. குல்தீப்பிடம் மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback