Breaking News

வார விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மைசூர்- காரைக்குடி சிறப்பு ரயில்:-

மைசூர்- காரைக்குடி சிறப்பு ரயில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி புதன்கிழமை மற்றும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சனிக்கிழமைகளில் மைசூரில் இருந்து 21.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் 2.45 மணிக்கு காரைக்குடியை வந்தடையும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண். 06296 காரைக்குடி மைசூர் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரைக்குடியில் இருந்து 19.00 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.10 மணிக்கு மைசூரை சென்றடையும். 

இந்த ரயில் மைசூர் - மாண்டியா - மடூர் - ராமநகரம் - கெங்கேரி - கே எஸ் ஆர் பெங்களூர் - பெங்களூர் கண்ட்டோன்மென்ட் - கிருஷ்ணராஜபுரம் - பங்காருபேட்டை - குப்பம் - சேலம் - நாமக்கல் - கரூர் - திருச்சி - புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று காரைக்குடிக்கு செல்லும்.

திருநெல்வேலி - ஷாலிமார் சிறப்பு ரயில்:-

நெல்லையிலிருந்து ஷாலிமாருக்கு வியாழக்கிழமைகளில் புறப்படும் ரயில் வருகின்ற 15-ம் தேதி முதல் அடுத்த மாதம் 5 தேதி வரையும், 

மறு மார்க்கத்தில் சனிக்கிழமைகளில் ஷாலிமரிலிருந்து இயக்கப்படும் ரயில் வருகின்ற 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 9 வரை இயக்கப்படுகின்றது

ரயில் நெல்லையில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு மானாமதுரை வருகின்றது. காலை 8 மணிக்கு திருச்சிக்கும், மதியம் 12:15 மணிக்கு திருவண்ணாமலைக்கும், மதியம் 1:30 மணிக்கு வேலூருக்கும், மாலை 3:40 மணிக்கு பெரம்பலூர் ரயில் நிலையம் சென்னை சென்றடைகின்றது. மறுநாள் இரவு 9:00 மணிக்கு ஷாலிமர் சென்றடைகின்றது.

மறு மார்க்கத்தில் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவில் 8.30 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையம் வந்தடைகின்றது. அதிகாலை 5.25 மணிக்கு திருச்சிக்கும், காலை 7:10 மணிக்கு காரைக்குடிக்கும், 7.50 மணிக்கு சிவகங்கை க்கும், 7.35 மணிக்கு மானாமதுரைக்கும், 10.20 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையம் சென்றடைகின்றது. மதியம் 1:15 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்று சேர்கின்றது.

திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்:-

திருநெல்வேலியில் இருந்து ஆக.13, 18 தேதிகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06020/19), மறுநாள் காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து ஆக.14, 19 ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில்  தாம்பரம் சிறப்பு ரயில்:-

நாகா்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு ஆக.18, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06012/11) மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 

மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஆக.19, 24 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.

மங்களூா்-கொச்சுவேலி சிறப்பு ரயில்:-

மங்களூரில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்  ஆக.17-ஆம் தேதி புறப்படும்

அதேபோல்  மறுமாா்க்கமாக ஆக.18-ஆம் தேதி  கொச்சுவேலியில் இருந்து  மங்களூருக்கு சிறப்பு ரயில் (எண் 06041/42) இயக்கப்படும்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback