Breaking News

சென்னையில் பரபரப்பு.. தப்பியோட முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் போலீஸ் எஸ்.ஐ முழு விவரம்

அட்மின் மீடியா
0
சென்னையில் பரபரப்பு.. தப்பியோட முயன்ற ரவுடியை  துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் போலீஸ் எஸ்.ஐ முழு விவரம்

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் காவல்துறை பிடியிலிருந்து தப்ப முயன்ற ரவுடி ரோஹித் ராஜை காலில் சுட்டுப்பிடித்த காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி

ரவுடி ரோஹித் ராஜ் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி 





சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரோகித் ராஜன், பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார் கொலை உள்பட 3 கொலை வழக்குகளும் இவர் மீது உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி ரோஹித் ராஜ், தேனியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தேனி சென்ற சென்னை போலீஸார், அங்கு பதுங்கியிருந்த ரோகித்தை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ரவுடி ரோஹித்தை சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இடங்களுக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். அப்படி சேத்துப்பட்டு பகுதியில் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது ரவுடி ரோஹித் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். 

இதனையடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காலில் பலத்த காயமடைந்த ரோஹித் ராஜனை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
 
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback