Breaking News

திருச்சி எஸ்பி வருண்குமார் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0
திருச்சி எஸ்பி வருண்குமார் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்.. நாம் தமிழர் நிர்வாகி கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கண்ணன் என்பவரை திருச்சி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 


இவர் சமூக வலைதளங்கள் மூலம் திருச்சி எஸ்பி வருண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எஸ்பி வருண் குமார் திருச்சி போலீசில் புகார் செய்தார். 

எஸ்பி வருண் குமார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியின் கண்ணனை அதிரடியாக கைது செய்துள்ளனர். 

அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி திருச்சி எஸ்பி வருண் குமார் கூறுகையில், ‛‛இது அவதூறு வழக்கிற்கான கைது இல்லை. என்னையும், எனது வீட்டு பெண்களையும், குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது'' என்று கூறியுள்ளார்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback