Breaking News

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மீண்டும் திறப்பு..! முழு விவரம்

அட்மின் மீடியா
0

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மீண்டும் திறப்பு..! முழு விவரம்

மாணவர்கள் போராட்டத்தை அடுத்து கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மறு உத்தரவு வரும் வரை காலவரையறையின்றி மூடல் என நேற்று அறிவித்த நிலையில் இன்று கல்லூரி வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது 

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு வகுப்பில் பேராசிரியை ஒருவர், மாணவர்களிடையே ஜாதி பிரிவினை பற்றி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனைக் கண்டித்து கடந்த ஆக.8ம் தேதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் அந்த ஆசிரியை விடுப்பில் சென்றுவிட்டார். ஆனாலும் பேராசிரியர் மீது துறை ரீதியாக பணியிடை நீக்கம், இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்லூரி, காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியை ஈரோடு தாளவாடி அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கல்லூரி கல்வி இயக்குநரின் உத்தரவை தொடர்ந்து வழக்கம்போல் இன்று கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

அரசு கலைக்கல்லூரி மீண்டும் திறப்பு..!

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback