Breaking News

திருச்சி என்ஐடி கழக விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை விடிய விடிய மாணவர்கள் போராட்டம்

அட்மின் மீடியா
0

திருச்சி என்.ஐ.டி யில் மாணவிக்கு, ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் நேற்று இரவு முதல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



ஒப்பந்த ஊழியர் மீது புகார் அளித்தால் மாணவிகளை விடுதி வார்டன் விமர்சனம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுதி வார்டனை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவ மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கல்லூரி வளாகத்தில் உள்ள என்.ஐ.டி இயக்குனர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விடுதி அறையில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback