Breaking News

உத்திரபிரதேசத்தில் பரபரப்பு தங்கும் விடுதியில் கழுத்தறுத்து பெண் கொலை நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0
உத்திரபிரதேசத்தில் உள்ள பரேலியில் உள்ள தங்கும் விடுதி ஹோட்டலில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

அந்த பெண்ணின் தொண்டை அறுத்துகொலை செய்யப்பட்டுள்ளார், மேலும் அந்த ஹோட்டல் அறை முகமது ஆலம் என்பவன் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளது .முகமது ஆலம்மை போலீசார் தேடி வருகின்றனர்



உத்தரபிரதேச பெண் மரணம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை ஹோட்டல் ஊழியர்களால் கடைசியாக காணப்பட்ட ஆலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் அறையில் 28 வயது பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தார், அந்த அறையை பதிவு செய்த நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள  கிரீன் பேலஸ் ஹோட்டலில் உள்ள அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, டூப்ளிகேட் சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்த ஊழியர்கள் அங்கு பெண்ணின் சடலம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இறந்து கிடந்த பெண்ணின் உடலில் ஐந்து ஆழமான காயங்கள் இருந்துள்ளன.

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கவே விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

பரேலியில் உள்ள அசம்நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ஆலம் eன்பவர் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறையை முன்பதிவு செய்துள்ளார். முகமது ஆலம் கொலையாளியாக இருக்கலாம் என்று அவரை போலீசார் தேடி வருகின்றனர்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback