Breaking News

கோவையில் பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை முழு விவரம்

அட்மின் மீடியா
0

கோவையில் பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை முழு விவரம்


கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். 48 வயதான இவர், வழக்கறிஞராக பணி புரிந்து வந்தார். . இவரது மனைவி நித்தியவள்ளி தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இன்று பொள்ளாச்சிக்கு  செல்லும் வழியில் மயிலேறிபாளையம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல் அவரது காரை வழிமறித்து சரமாரியாக வெட்டி  விட்டு தப்பி ஓடி விட்டனர் இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்தார். 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த செட்டிபாளையம் காவல் துறையினர் உதயகுமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் கொலைக்காக காரணம் குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback