Breaking News

கொள்ளிடம் ஆற்றில் பாலத்துக்கு அடியில் உறங்கியவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் வீடியோ

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதை தொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டுள்ளது

 


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் அதிகமான நிலையில் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் ஒருவர் தண்ணீரில் சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்த தீயணைப்பு துறையினர் கீழே இறங்கி கயிறு போட்டு தூக்கி பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். 

விசாரித்ததில் அவர் அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழில் செய்து வரும் 56 வயதான சசிக்குமார் என தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback