கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதி கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வீடியோ இணைப்பு
அட்மின் மீடியா
0
கொல்கத்தாவில், முதுநிலை மருத்துவமாணவி படுகொலைக்கு நீதி கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகைகுண்டு வீசி, தடியடி நடத்திபோராட்டக்காரர்களை கலைத்த காவல்துறை
கொல்கத்தா பெண் டாக்டர் கொலையை கண்டித்து நள்ளிரவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை மருத்துவமனையின் எமெர்ஜென்சி வார்டு முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென ஒரு கும்பல், அங்கிருந்த தடுப்புகளை தள்ளிவிட்டு, காவல் வாகனங்களை தாக்கியதுடன், மருத்துவமனைக்குள் புகுந்து சூறையாடியது. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் அங்கே கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தி கலைத்துள்ளனர்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1823911140176597120
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்