நிரம்பி வழியும் தடுப்பணையில் சாகசம் செய்த இளைஞர் நீரில் முழ்கி உயிரிழப்பு வைரலாகும் வீடியோ
அட்மின் மீடியா
0
நிரம்பி வழியும் டேம்மில் சாகசம் செய்த இளைஞர் நீரில் முழ்கி உயிரிழப்பு வைரலாகும் வீடியோ.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மகர்தோக்டா டேம் நீர்த்தேக்கத்தின் சுவரின்மீது ஏறி நின்று சாகசம் செய்ய முயன்றபோது வழுக்கி விழுந்ததில் நீரில் மூழ்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு!
நாக்பூர் மாவட்டம் உம்ரெட் நகருக்கு அருகில் உள்ள மகர்தோக்டா ஏரியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது
சுதந்திர தினத்தையொட்டி மகர்தோகடா ஏரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதில் மூன்று இளைஞர்கள் திடீரென ஏரியின் நீர் முன்பக்கமாக ஓடும் சுவரில் ஏறிய இளைஞன் திடீரென எதிர்திசையில் உள்ள ஏரியில் தவறி விழுந்தார்.இதனால் நீச்சல் தெரியாத சில நொடிகளில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞரின் பெயர் ஆகாஷ் கன்ஷ்யாம் சாகோல் (வயது 23, நாக்பூர், கல்மனா மாவட்டம், கோபால் நகரில் வசிப்பவர்). நூற்றுக்கணக்கான மக்கள் இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்,
சிலர் இந்த காட்சியை தங்கள் மொபைல் போன்களில் படம் பிடித்தனர். ஆனால் அவர்களில் சிலர் முயற்சித்தாலும் அவர்களும் வெற்றிபெறவில்லை. தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1824646715330400447
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ