Breaking News

உருளைக்கிழங்கு லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் முழு விவரம்

அட்மின் மீடியா
0
உத்தரப்பிரதேசத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக, அவரிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ராம் கிருபால், விவசாயியின் கோரிக்கையை நிறைவேற்ற 5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என்று கேட்கிறார். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அந்த ஆடியோவில் குற்றம் சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் ஒரு விவசாயியிடம் 5 கிலோ உருளைக்கிழங்கு கேட்டுள்ளார். அதற்கு அந்த விவசாயி என்னால் 2 கிலோ உருளைக்கிழங்கு மட்டுமே கொடுக்க முடியும் என்று பதில் அளித்துள்ளார். கடைசியில் 3 கிலோ உருளைக்கிழங்கு கொடுப்பதாக இருவரும் பேசிக் கொண்டனர்.

மேற்படி ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட எஸ் பி அமித் குமார் ஆனந்த் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் ராம் கிரிபால் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback