Breaking News

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச வேட்பாளாரக அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச வேட்பாளாரக அறிவிப்பு

 

இலங்கையில் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர். 

இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே(வயது 38) அறிவிக்கப்பட்டுள்ளார்

இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் செப்டம்பர் 21ல் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளத.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback