Breaking News

திருவள்ளூர் மதரஸாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அரபி ஆசிரியர் கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அரபி ஆசிரியர் கைது நடந்தது என்ன முழு விவரம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அருகே பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிவாசல் ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் இயங்கி வரும் பள்ளிவாசலில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அரபி மொழியில் குரான் கற்று வருகின்றனர். 

பள்ளிவாசலுக்கு வந்து அரபி பயிலும் சிறுமிகளுக்கு அங்கு குரான் கற்று கொடுக்கும் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிவாசலுக்கு சென்று சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பள்ளிவாசல் அரபி ஆசிரியர் முகமது ஆசிப் (32) என்பவர் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback