கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் ஆற்றில் குளித்த போது டிடிஎஃப் வாசனிடம் தகராறு - வைரல் வீடியோ
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்த பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், போதையில் சிலர் என்னை கத்தியால் குத்தி கொலை செய்ய வந்ததாக கூறியுள்ளார்.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள சிறிய ஓடையில் தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது, போதையில் வந்த நபர் ஒருவர் இங்கே குளிக்கக்கூடாது, இது எங்களுக்கு சொந்தமான இடம் என கூறியதாவும், அப்போது பேசிக் கொண்டிருந்த போதே இரும்பு கம்பியால் தன்னை ஒருவர் குத்தியதாகவும், தான் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகவும், தற்போது தான் உயிரோடு உள்ளதே கடவுள் புண்ணியம் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ விவகாரம் வெளியாகி இருக்கும் சூழலில் வாசன் தரப்பு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1829355689032253739
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ