சென்னை பப்பில் நண்பர்களுடன் நடனமாடிய காரைக்குடியை சேர்ந்த முகமது சுகைல் மயங்கி விழுந்து உயிரிழப்பு
அட்மின் மீடியா
0
சென்னை நுங்கம்பாக்கத்தில் பப்பில் நண்பர்களுடன் நடனமாடிய 22 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் ராமாபுரத்தில் உள்ள பி.ஜி ஹாஸ்டலில் தங்கி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.
முகமது சுகைல் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்புக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார் அங்கு அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருந்த போது தீடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக நண்பர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சுகைல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், தகவல் அறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்