Breaking News

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் - நாம் தமிழர் நிர்வாகி மீது போக்சோ வழக்கு! கட்சியில் இருந்து நீக்கிய சீமான் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0
கிருஷ்ணகிரி அருகே போக்சோ வழக்கில் சிக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி காவேரிப்பட்டினம் சிவராமன் கட்சியில் இருந்து நீக்கம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துஅவரை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (32). இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். 





இந்நிலையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அம்மாணவி தன் பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர்.கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவராமனைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிவராமனைக் கட்சியில் இருந்து நீக்கி  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
                       

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த கா.அ.சிவராமன் (30357937718) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback