Breaking News

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகானந்தம் நியமனம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகானந்தம் நியமனம்



தமிழ்நாட்டில் கட்டடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் தலைவராக 2019ஆம் ஆண்டு முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback