Breaking News

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை,தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஜமாத்துல் உலமா பேரவை தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு

அட்மின் மீடியா
0
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஜமாத்துல் உலமா பேரவை தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (20.08.2024) தலைமைச் செயலகத்தில், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் திரு. முகமது ஃபஸ்லூர் ரஹீம் முஜாதிதி, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா பேரவை தலைவர் திரு. காஜா மொஹிநுதீன் பக்வி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, 

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக சந்தித்துப் பேசினார்கள். 

இந்த சந்திப்பின் போது, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே. எஸ். மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.எச். ஜவாஹிருல்லா, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மைச் செயலாளர் திரு. சி. விஜயராஜ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் (மு.கூ.பொ) திரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் உறுப்பினர் திருமதி ஏ.எஸ்.பாத்திமா முசாபர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள் மறுப்பு செய்தி

Give Us Your Feedback