Breaking News

சிவராமனின் தந்தை அசோக்குமார், இருசக்கர வாகனத்தில் இருந்துகீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை நிகழ்வில் கைதாகி எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சிவராமனின் தந்தை அசோக் குமார், நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான சிவராமன் தற்கொலை, அவரது தந்தையும் மரணம் நடந்தது என்ன முழு விவரம்





கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை

அதேபோல் சிவராமனின் தந்தை நள்ளிரவு குடிபோதையில் வாகனத்தில் சென்ற அசோக்குமார்(61), கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற என்.சி.சி. முகாமில் 12 வயதான சிறுமிக்கு பயிற்சி அளித்த என்.சி.சி. பயிற்சியாளரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பொறுப்பு வகித்த சிவராமன் போலியாக என்.சி.சி. பயிற்சி அளித்தது தெரியவந்தது. மேலும், அவர் அந்த மாணவியை போல மேலும் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது. 

இந்த சம்பவத்தில் சிவராமன், பள்ளியின் முதல்வர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சிவராமனை கட்சியில் இருந்து நீக்குவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்தது. 

இந்நிலையில் கைதான சிவராமன் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடியபோது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் அதிகளவு விஷம் கலந்து இருந்தது கண்டறியப்பட்டது. அப்போது எலி மாத்திரையை சாப்பிட்டதாக மருத்துவரிடம் சிவராமன் கூறியுள்ளார்.  இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். 

இந்த நிலையில், சிவராமனின் தந்தை அசோக்குமார் நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். 

பாலியல் வன்கொடுமை வழக்கில், தனது மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த மன உளைச்சலில் இருந்த சிவராமனின் தந்தை அசோக் குமார், நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். நேற்று காவேரிப்பட்டணம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். 

அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் சிவராமனின் தந்தை அசோக் குமார், நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1826957390509642237

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback