Breaking News

ரேசன் கடைகளில் பாக்கெட்களில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ரேசன் கடைகளில் பாக்கெட்களில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம் முழு விவரம்

 

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. வெளிக்கடைகளில் உள்ள விலையை விட குறைந்த விலையில் ரேஷனில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். 

ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்யப்பட்டு சோதனை அடிப்படையில் 234 ரேஷன் கடைகளில் பொருட்களை பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback