Breaking News

சென்னை வந்த ரெயிலில் ஐடி பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் - நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை வந்த ரெயிலில் ஐடி பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் நடந்தது என்ன முழு விவரம்


கேரள மாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 26-ஆம் தேதி வந்த விரைவு ரயிலில் பெண் மென்பொறியாளா் பயணித்துள்ளாா். அந்த ரயில்  ரயில் வேலுார் அடுத்த காட்பாடி பகுதியை கடந்தபோது, ஐ.டி.,பெண் ஊழியரிடம் இருந்த மொபைல் போனை, அதே ரயிலில் பயணித்த வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

அவரை விரட்டி சென்ற ஐ.டி., பெண் ஊழியரை, அந்த நபர் மேலும் இருவருடன் இணைந்து, ரயில் கழிப்பறைக்குள் தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.பின்னர், அந்த நபர்கள் வேறு பெட்டிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும் மென்பொறியாளர் ரயில்வே பாதுகாப்பு படையிடம் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பி ஓடிய மூன்று பேரை பிடிக்க, நான்கு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையிலும், 20 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback